Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரத்யங்கிரா தேவி கோயிலில் பொன். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

அக்டோபர் 09, 2019 04:49

கும்பகோணம் அருகே  அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தமிழக பாஜக தலைவராக நியமனம் பெற வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்கோயிலில்  நடைபெற்ற சிறப்பு யாகத்திலும்  பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். 

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியும் , சீன அதிபரும் சந்திக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது , இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்திய பொருளாதாரம் மேம்படும் என்றும், தமிழகத்திற்கும் சீனத்திற்கும் உள்ள தொன்மையான உறவை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்கி தர பரிந்துரை செய்யப்படுமா? என கேட்டதற்கு அதற்கு தேவையான நிதியை தமிழக அரசு செய்து வருவதாகவும் கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் , பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக பாஜகவை  பொறுத்தவரை தற்போது அமைப்பு தேர்தல்கள் நடைபெற உள்ளது .இந்த அமைப்பு தேர்தல் நடைபெற்ற பின்பு மாநில தலைமைக்கு தேர்தல் நடைபெறும் ,அதற்கிடையே தேவைப்படின்  பாஜக தலைமை மாநில தலைவரை நியமனம் செய்யலாம் என்றார். 

தலைப்புச்செய்திகள்